காதலி அமைவதெல்லாம் 5

sexstories

Administrator
Staff member
tamil sex /

Tamil Sex Stories திடீரென்று அவள் இவனை அழைத்ததும். . .தேன்மொழியா நம்மை கூப்பிட்டாள் என்று அசோக்கிற்கு ஆச்சர்யம்.மெதுவாக திரும்பி பார்த்தான். அவளது முகம் கொஞ்சம் தெளிவாக இருந்தாலும்.அந்த அழகான சிரிப்பு இல்லை.

இனிமே யாருடனும் பேசக்கூடாது என்று தீர்மானித்து இருந்தவன். . அவளது இனிமையான குரலையும், அவளது அழகான முகத்தையும் பார்த்ததும் அனைத்தையும் மறந்தான்.

இருந்தாலும் உடனே அன்பாக பேச கூடாது என்று முடிவெடுத்து. கொஞ்சம் குரலை உயர்த்தி கடுமையாக "இப்ப என்னை எதுக்கு கூப்பிட்ட?" என்றான்.

இவன் இப்படி கூறியதும் என்ன பேசுவது என்று தெரியாமல் அவள் கொஞ்சம் மிரண்டுவிட்டாள்.

ஒன்னும் இல்ல அசோக் தெரியாம கூப்பிட்டுவிட்டேன். . .என்னை மன்னிச்சுரு என்று கிளம்புவதற்கு முற்பட்டாள்.

அட ச்சே, அவளா வந்து மன்னிப்பு கேக்குறா இப்படி பேசிட்டியே என்று அவளை சென்று சமாதான படுத்த முயன்றான்.

தேன்மொழி ப்ளீஸ் நில்லு, நீ காலைல இருந்து என்னை ஒரு தடவை கூட திரும்பி பார்க்கல. . .அதோட நீ மதியம் சாப்பிடும்போதும் என்னை பார்க்கல.

ஒரு வார்த்தை கூட பேசலை, இப்ப கிளம்பும்போது வந்து பேசுனதும் தான் டென்ஷன் ஆகிட்டேன் என்று முகத்தை பாவமாய் வைத்து கொண்டு நின்றான் அசோக்.

ஆமாம் பேசல நீயாச்சும் வந்து என்கிட்டே பேசி இருக்கலாம்ல. . .என்று அவள் கொஞ்சம் அன்பாக கூறினாள்.

இல்ல நீ என்மேல் ஏதோ கோவமா இருக்கிறதா நினச்சுட்டு இருந்தேன்.

நேற்று மாலை உன் தோள்மேல தெரியாம உரசிட்டேன், அத இன்னும் நினைச்சுட்டு பேசாம இருந்தியா. அப்படி இருந்த என்னை திரும்பவும் மன்னித்துவிடு.

ஐ ஆம் வெரி வெரி சாரி என்று கூறினான்.

இதை கேட்டதும் அவள் சிரித்தே விட்டாள். . .டேய் லூசு அதுக்கு போயி நான் கோபபட்டுடேன்னு நினைச்சியா. நீ எப்படிபட்டவன்னு எனக்கு நேத்து மதியம் பேசும்போதே தெரியும்.

நேத்து நான் சாப்பிட கூப்பிட்டதும், நீ வந்து என் கூட கொஞ்சம் பயந்துதான் பேசுன. . . அதோட என்னோட பக்கத்துல இருந்த பொண்ணுங்ககிட்டையே ரொம்ப தயங்கி தயங்கி பேசுன. . .

அப்பவே புரிஞ்சுடிச்சு நீ பொண்ணுங்க கூட பேசுனது இல்லன்னு. .. நீ ஒரு அப்பாவி டா என்று மீண்டும் சிரித்தாள்

இந்த சிரிப்புக்குதானே காலைல இருந்து காத்துகிடந்தேன். இப்பவாச்சும் சிரித்தாளே என்று மகிழ்ச்சி அடைந்தேன்.

பின்பு எதற்கு என்னிடம் பேசவில்லை, என்னுடைய வாழ்கையில் என் அம்மாவிற்கு பின்பு பேசிய முதல் பெண் நீ தான். . .

உன்னிடம் பழக வேண்டும். . . உன்னை பற்றி நிறைய தெரிந்து கொள்ளவேண்டும் என்று நினைத்தாலும், உன்னிடம் பேசுவதற்கு நேரமே கிடைக்கவில்லை.

அப்படி இருக்கும்பொழுது, காலையில் நீ என்னுடன் பேசாமல் இருந்தது என்னால் தாங்க முடியவில்லை.

அந்த நேரமெல்லாம் மனதிற்குள்ளே செத்துக்கொண்டு இருந்தேன்.
நீ கடைசி வரைக்கும் என்னுடன் ஒரு அன்பான தோழியாக இருப்பாயா?
என்று ஒரே மூச்சில் பேசி முடித்தேன்.

இதை கேட்டவுடன் அவளது உடல் முழுவதும் சிலிர்த்து போய் அமைதியாக என்னை வியந்து பார்த்தாள்.

பின்பு ஒரு அமைதிக்கு பின் பேசினாள், சரி நீ என்கிட்டே பேசணும் அவளோதானே, நாளை காலேஜ்க்கு ஒரு மணி நேரம் முன்னாடியே வந்துடு.

நானும் வந்துடுறேன் நாம பேசலாம்.இப்ப வா கிளம்பலாம். என்று அழைத்தாள்.

ஒரு பெண் என்னை முதல் முறையாக பேச அழைக்கிறாள் என்று நினைத்தும். . எனக்கு அப்படியே ஆகாயத்தில் பறப்பது போல் இருந்தது.

அதே மகிழ்ச்சியுடன் கிளம்பலாம் என்று வெளியில் வந்தோம்.

சரியாக அவளது கார் வந்தது. . அதே சிரித்த முகத்துடன் என்னை விடைபெற்று சென்றாள்.

நாளை, நான் என்ன பேசுவது என்று யோசித்துக்கொண்டே அவளது நினைவுகளுடன் வீட்டை அடைந்தேன்



RelatedClick to expand...


Share this:

Like this:
Like Loading...
 
Back
Top