காதலி அமைவதெல்லாம் 4

sexstories

Administrator
Staff member
tamil sex /

Tamil Sex Stories » எதிர்முனையில் கோபி, மச்சி காலேஜ் எப்படிடா இருக்கு, உனக்கு பிடிச்சுருக்கா என்று வினாவினான். எல்லாம் நல்ல இருக்குடா, பொண்ணுங்க கூட பேசுறது எப்படின்னு இருந்த பயம் கொஞ்சம் போயிருச்சு. எனக்கு நீ கூட இல்லாதது மட்டும் தான் ஒரு குறை என்று கூறினேன்.

உனக்கு எப்படிடா இருந்துச்சு என்றேன்.

கோபி அதை ஏண்டா கேக்குற என்னோட கிளாஸ்ல வெறும் பசங்க மட்டும் தான்டா ஒரு பொண்ணு கூட இல்ல. . .
ஏதோ சுமாரா போச்சு என்று நொந்து கொண்டான்.

இப்படி அவன் கூறியதால் தேன்மொழியை பற்றி இப்போது அவனிடம் கூறவேண்டாம், அவனை நேரில் பார்க்கும்பொழுது கூறிக்கொள்ளலாம் என்று விட்டுவிட்டேன்.

சரி விடுடா உனக்குத்தான் உன்னோட ஆளு நிர்மலா இருக்குறால்ல, நீ ஏண்டா கிளாஸ்ல பொண்ணுங்க இல்லனு வருத்தபடுற என்று சமாதானம் செய்தேன்.

நிர்மலா கோபியின் அத்தை மகள், என்னைய அவளுக்கு ரொம்ப பிடிக்கும். . .என்னை மட்டும்தான் அவள் திருமணம் செய்து கொள்வேன் என தீர்மானமாக இருக்கிறாள் என்று அசோக்கிடம் சொல்லிருக்கிறான்.

கோபியும் சரிடா சண்டே மீட் பண்ணலாம் என்று போனை வைத்தான்.

அசோக் உடை மாற்றிவிட்டு ஹாலிற்கு வந்தான். அவனுடைய அம்மா குடுத்த டீயை குடிவிட்டு டிவி பார்த்துட்டு இருந்தான்.

அப்பொழுது, அவனுடையா அப்பா வீட்டினுள் நுழைந்தார், நீண்ட நாட்களுக்கு பிறகு அவர் வீட்டிற்கு வந்ததால் அனைவரது முகத்திலும் மகிழ்ச்சி.

வந்தவர் என்னுடைய கல்லூரி, தம்பியின் படிப்பு பற்றி விசாரித்தார்.

நல்லா படிக்கணும் என்று சொல்லிவிட்டு, நான் நீண்ட நாட்களாக கேட்டு கொண்டிருந்த மடிக்கணினியும், தம்பி சுரேஷ் கேட்டுக்கொண்டிருந்த பைக் ஒன்றும் புதிதாக வாங்கி வந்திருந்தார். எங்கள் முகத்தில் மீண்டும் மகிழ்ச்சி.

அம்மா அவரை பற்றி விசாரித்தாள், என்னங்க உங்க உடம்பு இப்படி இளைச்சு போச்சு, நீங்க சரியாவே சாப்பிடறது இல்லையா.

உங்க தொழில நம்ம ஊருக்கு மாத்துங்கனு சொன்ன கேக்கவே மாட்றீங்க என்று வருத்தபட்டாள்.

பசங்க ரெண்டு பேரும் படிச்சு நல்ல நிலைமைக்கு வந்துட்டா, நான் நம்ம ஊர்ல வந்து செட்டில் ஆகிடுவேன், எல்லாம் கொஞ்ச வருஷம்தான் நீ ஏதும் கவலைபடாத என்று சமாதானம் படுத்தினார்.

பின்பு இரவு ஆனது, அனைவரும் இரவு உணவை முடித்துவிட்டு தூங்கச்சென்றோம்.

நான் பெட்டில் சென்று படுத்தவுடன் தேன்மொழியின் முகம் என் கண்முன்னே வந்து நின்றது. இப்பொழுது அவள் என்ன செய்து கொண்டிருப்பாள், அவளும் என்னை நினைத்து கொண்டிருப்பாளா. .

இல்லை. . . மறந்து விடுவாளா என்று நினைத்துகொண்டே சோர்வில் தூங்கிவிட்டேன்.

மறுநாள் சரியான நேரத்திற்கு எழுந்து கல்லூரிக்கு செல்ல கிளம்பினேன், தம்பி அவனுடைய பைக்கில் செல்ல முடிவு செய்தான், அம்மாவும் அப்பாவும் அவனுக்கு அறிவுரை கூறி பைக்கில் பாதுகாப்பாக செல்லவும் என்று அனுப்பிவைத்தனர்.

எனக்கும் அவனை இனி கூட்டிச்செல்லும் வேலை இல்லை என்று நிம்மதி அடைந்தேன்.

பின்பு அப்பா மதியம் கிளம்புகிறேன், அடுத்த மாதம் மீண்டும் வருகிறேன் என்றார்.

சரிப்பா போயிட்டு வாங்க என்று சொல்லிவிட்டு தேன்மொழியை காணப்போகும் ஆவலோடு பைக்கை எடுத்து கல்லூரிக்கு சென்றேன்.

அங்கே என்னுடைய வகுப்பிற்குள் சென்று அமர்ந்தேன். வகுப்பு ஆரம்பிக்க சில நிமிடங்களே இருந்தது.

தேன்மொழி இன்னும் வரவில்லை, அருகில் இருந்த முத்து, பாலாவிடம் பேசினேன்.

அவர்களும் என்னுடன் நன்றாக பேசினார், எங்கள் மூவருக்குள்ளும் ஒரு நல்ல நட்பு உருவானது.

சிறிது நேரத்தில் வகுப்பில் அனைவரும் ஒருவர்பின் ஒருவராக வந்து கொண்டிருந்தனர். அவள் எப்போது வருவாள் என்ற ஆவலுடன் வாயிலேயே பார்த்து கொண்டிருந்தேன்.

இறுதியாக தேன்மொழியும் வந்தாள்.. அவளாக என்னை பார்த்து பேசுவாள் என்று ஆர்வமாய் இருந்தேன்.

ஆனால் அவள் என்னை பார்க்கவில்லை. . முகத்திலும் மகிழ்ச்சி இல்லை. அவள் பேசாமல் சென்று அவளது இடத்தில் அமர்ந்தாள்.

என்னை ஒருமுறை கூட அவள் திரும்பி பார்க்கவில்லை. எனக்கு என்னவோ போல் இருந்தது. . .

இப்ப இவளுக்கு என் மீது என்ன கோபம். ஒருவேளை என்னை மறந்துவிட்டாளோ என்றும் தோன்றியது.

அப்போது பேராசிரியரும் வந்து வகுப்பை ஆரம்பித்துவிட்டார்.

என் மனது முழுவதும் தேன்மொழியின் நினைவாகவே இருந்தது. என்னால் வகுப்பை சரியாக கவனிக்க முடியவில்லை.

ஏன் என்னிடம் பேசாமல் சென்றுவிட்டாள், நான் என்ன தவறு செய்தேன், ஒருவேளை நேத்து கிளம்பும்போது தெரியாம லேசா உரசிவிட்டேனே, அதனால் இருக்குமா.

நான் தான் அப்பொழுதே மன்னிப்பு கேட்டுவிட்டேனே, இப்பொழுதும் அதைதான் நினைத்து கொண்டிருப்பாளோ. . . என்று கவலை அடைந்தேன்.

எல்லா காலை வகுப்புகளும் நடந்து முடிந்தது. . .தேன்மொழியும் அவனை ஒருமுறை கூட திரும்பி பார்க்கவில்லை.

மதிய உணவு இடைவேளை வந்தது.முத்துவும், பாலாவும் கேண்டீன் சென்றுவிட்டனர்.

இப்பொழுதேனும் அவள் என்னை திரும்பி பார்ப்பாளா என்ற ஏக்கத்துடன் அவளை பார்த்தான். அவள் உணவை எடுத்து சாப்பிட்டு கொண்டிருந்தாள்.

அவளது அருகில் இருந்த மலர், காவியாவும் என்னை கண்டுகொள்ளவில்லை.

ஆமாம், இவளே என்னை கண்டுக்கவில்லை, அவர்கள் எப்படி பார்ப்பார்கள்.

ச்சே இந்த பொண்ணுங்கள பத்தி புரிஞ்சுகவே முடியல. நானா இவ கூட போயி பேசினேன். .

அவளாக வந்தாள், அவளாகவே பேசினாள். . சாப்பிடவும் அவள் தான் என்னை அழைத்தாள்.

இப்ப கண்டுக்கவே இல்லை. . . உனக்குல்லாம் எந்த பொண்ணும் பிரண்டா கூட அமையாது. என்று நொந்துகொண்டான்.

பின்பக்கம் திரும்பி பார்த்தான். . அவரவர்கள் ஒரு கூட்டத்துடன் அமர்ந்து சந்தோசமாக சாப்பிட்டனர்.

அசோக்கிற்கு இந்த தனிமை மிகவும் வாட்டியது, இப்ப மட்டும் கோபி இருந்தா, இப்படி இருந்துருப்பேனா என்று யோசித்துவிட்டு ஒரு முடிவிற்கு வந்தான்

நாம இந்த காலேஜ்ல படிச்சு முடிக்கிரவரைக்கும் உன்ன யாரும் கண்டுக்க போறதில்லை.

இனிமேல் நீ எந்த பெண்ணையும் நினைக்க கூடாது, ஏதோ கோவிலில் இடித்துவிட்டேன் அதுவும் மன்னிப்பு கேட்டாச்சு. . அதை மறந்துட வேண்டியதுதான்.

இதுக்காக நீ உன்னோட மனச அலைபாய்வதற்கு விடக்கூடாது.

இனி நீ தனியாகவே இருந்தாலும் அத பத்தி நினைக்க கூடாது.

எப்படியாச்சும் படிச்சு நல்ல வேலைக்கு போகணும் அதுதான் எப்பவும் உன்னோட மனசுல இருக்கனும். .
வேற ஏதும் இருக்க கூடாது என்று மனதிற்கு தைரியம் சொல்லிக்கொண்டான்.

பின்பு ஒரு மனதாக அவன் தனியாகவே அமர்ந்து சாப்பிட்டு முடித்தான்.

மதியம் வகுப்புகள் ஆரம்பித்தது, அனைவரும் வந்து அமர்ந்தனர்.

இனிமே அந்த பக்கம் திரும்பி பாக்க கூடாது. நாம உண்டு நம்ம வேலை உண்டு அப்படிதான் இருக்கனும் என்று முடிவெடுத்து . . பாடத்தை நன்றாக கவனிக்க ஆரம்பித்தான்.

கல்லூரி முடிந்தது . . . அனைவரும் வீட்டிற்கு செல்ல எழுந்தனர். . பாலா, முத்து செல்கிறோம் என்று விடைபெற்றனர்.

சரி கிளம்பலாம். . .என்று நடக்க முற்பட்டான். . .

அசோக் கொஞ்சம் நில்லு உன்கூட நான் பேசணும் என்று தேன்மொழி அவனை அழைத்தாள்



RelatedClick to expand...


Share this:

Like this:
Like Loading...
 
Back
Top