sexstories

Administrator
Staff member
இரவு..! டிவியில் கமல் படம் ஓடிக்கொண்டிருந்தது..!
கட்டிலில் நான்.. நிலாவினியின் மடியில் தலைவைத்து.. உன் மடியில் காலைப் போட்டுப் படுத்திருந்தேன்..!
நீ.. என் கால்களைப் பிடித்து விட்டுக்கொண்டிருக்க.. நிலாவினி.. என் தலையைக் கோதிக்கொண்டிருந்தாள்..!
ஆனால் நிலாவினிக்கு ஏனோ வியர்துக்கொண்டே இருந்தது.தலைக்கு மேல் பேன் சுழன்று கொண்டிருந்த போதும்..!
அடிக்கடி அவளிடமிருந்து பெருமூச்சுக்கள் வெளிப்பட்டுக்கொண்டிருந்தது..!

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

தமிழ்காமவெறி தளம்

"நிலா.." என்றேன்.

" ம்..ம்ம்..!" என்று என்னைப் பார்த்தாள்.

"என்னாச்சு..?"

" ஏன்..?"

"ஒரு மாதிரி.. நெர்வஸா இருக்க போலருக்கு..?"

" அதெல்லாம்.. இல்ல." என்று சிரித்தாலும் அந்தச் சிரிப்பில் ஜீவன் இல்லை.

"இல்ல.. ஏதோ இருக்கு.." என நான் சொல்ல..
அமைதியாக.மீண்டும் ஒரு பெருமூச்சை வெளியேற்றினாள்.
என் தலைமுடியை விட்டு கன்னத்தை வருடினாள்..!
"ம்..!!" என்று முனகினாள்.

"என்ன.. ம்..?"

"உங்க. கிட்ட.. ஒன்னு சொல்லனும்." என்று மிகவும் மெதுவான குரலில் சொன்னாள்.

"சொல்லுமா."

"இ..இல்ல.. அத.. எப்படி.சொல்றதுனு.?"

"எப்படி சொல்லுவ..? வாயாலதான். .!"

"இ.. இது. கொஞ்சம். சீரியஸ்.."

"அப்படியென்ன. மேட்டர்..?"

சிறிது.தயங்கிவிட்டு. .. "பயமாருக்கு." என்றாள்.

"அப்படியா.. எதனால..?"

" உங்களுக்கு.. ஷாக்.. தரப்போறது."

" சொல்லேன்.. பாப்பம்.."

"எத்தனையோ தடவை.. சொல்லனும்.. சொல்லனும்னு நெனைச்சிருக்கேன்..! ஆனா.. பயம் என்னை தடுத்துரும்..! அப்பறம் சொல்லாமயே விட்றுவேன்.! அப்படி நான் சொல்லாம.. தள்ளிப் போட்ட ஒவ்வொரு நாளும் எனக்கு நரக அவஸ்தையாத்தான் இருக்கும்..! ஆனா. இன்னிக்கு எப்படியாச்சும்.. சொல்லியே ஆகனும்னு. முடிவு பண்ணியிருக்கேன்..! இதுக்கு மேலயும் என்னால மறைக்க முடியாது. ."

"அப்படியா..? சொல்லு.?" என்றதும்.
பெருமூச்சுடன் குணிந்து.. என் நெற்றியில் முத்தம் கொடுத்தாள்.
"உண்மை கொடுமையானதுனு சொல்வேனே..?"

"ம்.. ஆமா.. உண்மை வேண்டாம்னு.. பொய்ய விரும்புவியே..?"

"ம்..ம்ம்..! அந்த கொடுமையான உண்மைதான் இது..! மொதல்லயே உங்ககிட்ட நா மன்னிப்பு கேட்டுக்கறேன்..! என்னை மன்னிச்சிருங்க.. ப்ளீஸ்..! ஏன்னா.. ஒருவேளை நான் சொன்ன பின்னால.. இந்த வாய்ப்பு கூட எனக்கு கெடைக்காம போகலாம்..! என்னை மன்னிக்கறதா வேண்டாமான்னு நீங்களே முடிவு பண்ணிக்குங்க..! ஆனா..சத்தியமா.இதை நான் வேனும்னே பண்ணலை..! வேற வழி இல்லாம. சூழ்நிலைகளோட நிர்பந்தத்துலதான்.. பண்ணிட்டேன்." என்று கடகடவெனப் பேசினாள்.

அவள் பேச்சு எனக்கு திகைப்பாக இருந்தது.
" ரொம்ப பீடிகை.. போடறியே..?"

என் முகத்டை தடவினாள். பெருமூச்செறிந்தாள். மறுபடி என்னை முத்தமிட்டாள்.
"நான்.. உங்களுக்கு துரோகம் பண்ணிட்டேன்.." என்றாள்.

தூக்கிவாரிப்போட்டது எனக்கு.
நீயும் திகைத்து விட்டாய்.
"ஏய்.. என்ன சொல்ற..?"

"ஐ'ம் ஸாரி." என கண்களை மூடிக்கொண்டாள்.

அவள் இதைச் சொன்னபோது இயல்பாக இல்லை. அவள் உடம்பு நடுங்கியது.
நான் எழுந்து உட்கார்ந்தேன்.
"நிலா. என்ன சொல்ற.. நீ..?"

"ஸாரி."

"எதுக்கு.?"

"எ.. எனக்கு. எனக்கு ஒரு.கொழந்தை.. பொறந்துச்சே.."

"ஆமா.. அதுக்.."

"செத்தே. பொளந்துச்சே..?"

"விடு..! அது.. விதி..!!"

"ம்..ம்ம்..! அதான் விதி..!!" என்ற போது அவளது மூடிய இமைகளிலிருந்து கண்ணீர் வழிந்தது.

நான் சட்டென அவள் தோளை வளைத்தேன்.
"ஏய்.. ரிலாக்ஸ்..மா..! நடந்து முடிஞ்சது.. இப்ப எதுக்கு..? விடு. வேற பேசலாம்..!!" என்றேன்.
ஏனோ என் உள்ளமும் நடுங்கியது.

கண்களைத் துடைத்து.. மூக்கை உறிஞ்சிக் கொண்டாள்.
" ஆனா.. அது உங்க.. குழந்தை இல்லே."

"எ. என்னது.?" அதிர்ந்து போனேன் "ஏய்.. என்ன சொல்ற.. நீ..?"

"என்னை மன்னிச்சிருங்க..! நான் ஒரு. ஒரு.. பாவி..! ஈனப்பிறவி.!" என்றாள். மறுபடியும் அவள் கண்களில் கண்ணீர் வழியத்தொடங்கியது "அ. அது.. அது. உங்க.. உங்களுக்கு.. உண்டான. குழந்தை.. இல்லே.."

என் தலைமீது இடி இறங்கியது போலிருந்தது.

"ந.. நமக்கு. மே. மேரேஜ் ஆகறப்ப. ஆகறப்பவே. நா.. நான். கன்சீவ்டா.. இருந்தேன்..!!" என்றாள் பிசிரிய குரலில்.

எனக்கு தலை சுழல்வது போலிருந்தது. இது நான் கொஞ்சம் கூட எதிர்பார்த்திராத. ஒரு பேரதிர்ச்சி..!

அழுதவாறே.." உ.. உங்க. உங்கள. நா. நாங்க. எல்லாருமா. சேந்து. ஏமாத்திட்டோம்.!!" என்றாள்.

"நெ. நெஜமாவா. சொல்ற..?"

" ந.. நம்ம.. மேரேஜ்க்கு.. முன்ன.. நான்.. உங்கள. லவ்.. பண்ணவே.. இல்ல..! நா. நான்.. லவ். லவ் பண்ணதா. சொன்னது. சுத்த போய்..! அது.. அது. குணா. குணா சொல்லிக்குடுத்தது..! எவ. எவனோ.. வாரிசுக்காக. உங்க. உங்கள. அப்பாவாக்க. போட்ட. ட்ராமா. அது."

'ஓ. காட்.!'
எனக்கு வந்த ஆத்திரத்தில்.. நான் என்னை மறந்தேன்..! என் கட்டுப்பாட்டை இழந்தேன்..!
என் ரத்தம் கொதிநிலையை அடைய..
'பளா'ரென அவள் கன்னத்தில் அறைந்தேன். அப்படியே பின்னால்.. கட்டிலில் சரிந்து விழுந்து விட்டாள் நிலாவினி.

"ஐயோ.. என்னங்க." என பதறி.. தாவி வந்து.. என்னைத் தடுத்தாய்.
கட்டிலில் சரிந்து விட்ட நிலாவினியை.. தூக்கி உட்கார வைத்து அணைத்துக் கொண்டாள்.
என் உடம்பு என் கட்டுப்பாட்டையும் மீறி.. நடுங்கிக்கொண்டிருந்தது.
என்னைச் சமாளிக்க.. நான் மிகுந்த சிரமப்படவேண்டியிருந்தது.

நிலாவினி கன்னத்தைப் பிடித்துக் கொண்டு உடைந்த குரலில் சொன்னாள்.
"நீங்க.. என்னை.. துண்டு.. துண்டா வெட்டிப்போட்டாலும் சரி..! ஆனா. ஆனா இதுக்கு மேலயும் நான் மறைக்க விரும்பல..! நமக்கு மேரேஜ் ஆகறப்பவே.. நான் கர்ப்பம்தான்..! அதனாலதான்.. உடனடியா.. உங்கள.. முடிவு பண்ணாங்க..! நான்.. உங்கள.. லவ் பண்றதா சொல்லி.. உங்களத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு. ஒத்தைக்கால்ல.நிக்கறதா.. சொல்லி.. ஆனா.. ஆனா. சத்தியமா. இதெல்லாம்.. குணா பண்ண வேலை..! அப்பவும். எனக்கு மனசு ஒப்பலை..! ஆனா. அவங்கள எதிர்க்க முடியல.!" என அவள் மேலும் சொல்லிக்கொண்டே போனாள்.
ஆனால் அது எதுவும் என் காதில் ஏறவில்லை.
எனக்கு என்ன செய்வதெனப் புரியவில்லை. என் மூளை கலங்கிப் போனதோ..? மண்டைக்குள் சூடாகி. தலை வலித்தது..!

"எ.. எல்லாருமா.. சேந்து.. என்.. என் தலைல மொளகா அறைச்சிட்டிங்களே..? சே.. என்ன. ஒரு.. துரோகம்.. இது..?!' நான் கொதி நிலையில் இருந்தேன்.

"என்னை மன்னிச்சிருங்க..! ஸாரி. ஸாரி. ஸாரி. ..!"

"உன்ன. உன்ன. உத்தமி.. பத்தினி. நல்லவ. ரொம்ப.. பாசக்காரினெல்லாம்.. நெனைச்சேனேடி..? கடைசில.. இப்படி.இப்படி. சீ. துரோகி.. துரோகி.. எவன்கூடவோ படுத்து.அதை வயித்துல ஏத்திட்டு. ஓ.ஷிட். நம்பிக்கை துரோகி.! என்னை டீப்பா லவ் பண்றதா.. சொல்லி.. வாழ்ந்தா. என்னோடதான்னெல்லாம் சொல்லி.." என் ஆத்திரம் தாளாமல். மறுபடி அவள் கன்னத்தில் ஒரு அறைவிட்டேன்.

"ஸாரி. ஸாரி..! அதெல்லாம்.. சொன்னது. உங்கள சம்மதிக்க வெக்க.."

"டாமிட். டாமிட்..! தந்திரமா என்னை ஏமாத்திட்டான்.. துரோகி. துரோகி. அவனெல்லாம். அவன. சே. உன்ன.. உன்ன கோயில்ல ஒருத்தன்கூட.. பாத்தப்பவே.. சந்தேகப்பட்டேன்டி. ஆனா. ஆனா. நீ..சொன்ன.. ஒரு பொய்யை நம்பி.. ஏமாந்துட்டேன்..! நல்லா ஏமாந்துட்டேன்..! இந்த உலகத்துலயே. அடி முட்டாள். கோமாளி. நானாத்தான் இருப்பேன்." என்று புலம்பலாகச் சொன்னேன்.

"நான் பண்ண.. அந்த தப்புக்கு தண்டனைதான்.. என் கர்பப்பை.. இல்லாம போயிருச்சு."

"பேசாதடீ. பேசாத." என்று கத்தினேன்.

அதன் பிறகு.. யாருமே.பேசவில்லை..!
சிறிது நேரம் கழித்து..
"சத்தியமா சொல்றங்க.. நான்.. உங்கள. ஏமாத்தினது என்னமோ..உண்மைதான்.. ஆனா.. அதுக்கான பரிகாரமாத்தான். நான் உங்கள. எந்த வகைலயும். கஷ்டப்படுத்தாம.. இருந்தேன்.
அது. அது.. நான் வேனும்னே பண்ணல.. என் மனசறிய.. நான் உங்களுக்கு.. ஒரு கெடுதலும் நெனைக்கல.. கல்யாணத்துக்கு முன்னவே.. நான் கெட்டுப்போயிருந்தாலும். கல்யாணத்துக்கு அப்றம்.. உங்கள. முழு மனசோட நேசிச்சேன்..! இ.. இந்த உண்மைய.. சொல்ல முடியாம. நான் பட்ட. பாடு."

ஒவ்வொன்றையும் நினைக்க நினைக்க.. எனக்குள் எரிமலை குமறியது..!
இதற்கு மேலும் நான் வீட்டில் இருந்தால். நிச்சயமாக மீண்டும் என் கட்டுப்பாட்டை இழந்து விடுவேன்.

சட்டென எழுந்து. சட்டையை எடுத்து மாட்டிக்கொண்டு.. வீட்டை விட்டு கிளம்பினேன்.
நீ.. என் பின்னாலேயே ஓடிவந்து.. என் கையைப் பிடித்தாய்.
"என்னங்க."

" விடுறீ." சட்டென உன் கையை உதளிவிட்டு வெளியேறினேன்..!!

நேராக நான் போனது பாருக்கு.. வயிறு முட்ட பீர் குடித்தேன்.
கூலிங் பீர் உள்ளே போனபோதும் எனக்குள் எரிமலை கொதித்தது.
நிலாவினியின் துரோகம். சாதாரணமானது அல்ல..! அதை எப்படி மன்னிக்க முடியும் என்னால்..?
அவளைவிட இந்த குணா.? பாஸ்டர்ட்.! எத்தனை வஞ்சகமாக என்னை ஏமாற்றி. ச்சை. அழகைப் பார்த்து மயங்கிய என்னைச் சொல்லவேண்டும்.. முதலில்..!!

பாரிலிருந்து வெளியே.. கிளப்பிவிடப்பட்டபோது. நான் நடக்க முடியாமல் தள்ளாடினேன்.
இப்போது எங்கே போவது எனப் புரியாமல்.. ஒரு ஓரமாக நின்று யோசித்தேன்.
அக்காளிடம் போகலாம். அவள் புருஷன் இருப்பார்.! பெரியம்மா இருப்பாள். ஆயிரம் கேள்விகள் வரும்..!
வேறு எங்கே போவது..?
'பவ்யா..' என்றது. என் குடிகார மூளை.
'ஆ.' சட்டென மின்னல் வெட்டியது.
'அப்பா இருப்பான்.. அவனது இரண்டாவது மனைவி இ ருப்பாள்..'
'ஆமா. யாரிந்த.. பவ்யா.? ஓ.. ஷிட். என் தங்கை..! என் அப்பாவின்.. இரண்டாவது மனைவியின். மகள்..!'

'வேண்டாம்.. எங்கும் போகவேண்டாம்..! இந்த உலகமே பொய்..! எல்லாம் நயவஞ்சகம்..!
ஒருவரையொருவர்.. ஏமாற்றி.. மோசம் பண்ணும் உறவுகள்.. கொடிய விக்ஷம் கொண்ட பாம்புகளை விடவும்.. நச்சுத்தன்மை கொண்டது..இந்த மனித இனம்..!
'ஒழிக.. இந்த மனித.. இனம்..! ஒழிக.. இந்த.. கொடிய உறவுகள்.. ஒழிக. ஒழிக..!!'
தடுமாறி விழப்போய தள்ளாடி நின்றேன்.!

"தாமரை." என்று குழறுவது எனக்கே புரிந்தது..!!!!

-சொல்லுவேன்...!!!!

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

தமிழ்காமவெறி தளம்
 
Back
Top