sexstories

Administrator
Staff member
படபடவென கதவைத் தட்டினேன். கதவு திறக்கவில்லை..!
' சே.. என்ன செய்கிறாள்.. அந்த.. அந்த.. அசிங்கமான. விகாரமான..'
கதவு திறந்தது.!
நான் தலைநிமிற.. பூதம் போலத் தெரிந்தாள்..!

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

தமிழ்காமவெறி தளம்

"நீங்களா. வாங்க. வாங்க."

" எங். எங்க. உன் புருஷன்.? இருக்கானா. அவன்..? அவன. வரச்சொல்லு.. வெளிய.. இங்க வரச்சொல்லு. எல்லாத்துக்கும். எல்லாத்துக்கும். அவன்தான்.. காரணம். எங்க. அந்த.. தாயோலி மகன். டேய்." நான் கத்தினேன்.

"ஐயோ.. என்னது.. குடிச்சிருக்கீங்களா..? சரி. சரி.. கத்தாதிங்க.. உள்ள வாங்க. பேசிக்கலாம்."

"ஏ.. நான் குடிப்பேன். அடிப்பேன். அதக்கேக்க. நீ.. யாரு..? உனக்கு.. என்ன ரைட்ஸ் இருக்கு.? எங்க அவன். உன் புருஷன்..? அவன வரச்சொல்லு.. வெளிய."

"மொதல்ல . உள்ள வாங்க..! உள்ள வந்து பேசுங்க.. ப்ளீஸ்."

"நா.நான் பேச வரல..! நா. வந்தது.. எதுக்குனா. ஆமா.. நா.வந்தது.. வந்தது.." என் கண்கள் சுழன்றது

"அண்ணா." என்றது திடீரென இன்னொரு பூதம்.

" நீ.. யாரு.? புதுசாருக்க..?"

" நான்தான்ணா. பவ்யா..உங்க தங்கச்சி. உள்ள.. வாங்க." என் கையைப் பிடித்து.. இழுத்து வீசினாள்.
நான் தடுமாறி. மிகச்சரியாகப் போய். ஒரு சேரில் விழுந்தேன்.

இரண்டு பூதங்களும்.. என் இரண்டு பக்கமும் நின்று கொண்டு.. என் ரத்தத்தைக் குடிக்க. என் மாமிசத்தை உண்கக் காத்திருந்தன..!

என் தலை சுழன்றது..!
"ஆமா. எங்ங உன் புருஷன்..? நான் மறந்துட்டேன்னு நெனைக்காத.. நான் மறக்ல.நான் மறக்க மாட்டேன். மறக்கவே மாட்டேன்."

"அப்பா. இல்லண்ணா.."

"அப்பாவா.. நீ.. யாரு.?"

"நான் பவ்யாண்ணா. உங்க தங்கச்சி."

"பவ்வீயா. ஓ.நீயா.. நீ. எப்படி இங்க வந்த..?"

" இல்லண்ணா. நீங்கதான் இங்க வந்தீங்க. இது..நம்ம வீடு. .. அப்பா இல்ல. அப்பா.. ஊருக்கு போயிருக்காரு."

"தாயோலீ. போய்ட்டானா.. அவன்..? நான் வருவேன்னு தெரிஞ்சே போய்ட்டானா.." தடுமாறி எழுந்து "அப்ப நான் போறேன். .. அவன.. வந்து பேசிக்கறேன்.!" என்னால் நிற்க முடியவில்லை.
கண்கள் மயங்கியது.. தலை சுழன்றது..கால்கள் தள்ளாடின..
வலுவிழந்து..

"மெதுவா. பாத்து.. பாத்து.நல்லா புடிடி." யாரோ தாங்கிப் பிடித்தார்கள்.

"நோ.நோ.. ஐம் ஸ்டெட்டி. ஸ்ஸ்டெட்டீ. விடு."

"வாங்கண்ணா.. படுத்துக்கோங்க. ப்ளீஸ்."

"ஏ.ஏ. நீ. யாரு.?"

" உங்க தங்கச்சிண்ணா..! ப்ளீஸ் படுத்துக்கோங்க.நம்ம வீடுதான்."

"நம்ம வீடா.. ஹே..ஹே." நான் இரண்டு எட்டுக்கள்கூட எடுத்து வைத்திருக்க மாட்டேன்.
ஏதோ ஒரு டீலாவில் விழுவது போலிருந்தது.
என்னோடு சேர்ந்து.. ஒரு பெணணும் விழுந்தாள்..!
நான் மயக்கமானேன்.!!

எப்படி விழித்தேன்.? எப்போது விழித்தேன்..? தெரியவில்லை..!
ஆனால் உடனடியாக அந்த மாற்றத்தை உணர்ந்தேன்.
இது என் வீடு இல்லை..!
உணர்வு மீண்டதும்.. சட்டென எழுந்து உட்கார்ந்தேன்.!

இன்னும் விடியவில்லை.
இரவில் நான் இங்கு எப்படி வந்தேன்.. என்பது.. அரையும் குறையுமாக நினைவில் வந்தது.
ஆனால் இங்கு.. என்ன நடந்தது. என்ன பேசினேன் என்பது. சுத்தமாக நினைவில் இல்லை..!
தலை பாரமாக இருந்தது..! விண்விண்னென்று வலித்தது. மீண்டும் படுக்க வேண்டும் போலிருந்தது.!
அதைவிட..
நிறைய யோசிக்க வேண்டும்..!
ஆனால்..தலை வலித்தது.
மூளை யோசிக்க மறுத்தது..!

நீயும்.. நிலாவினியும் மாறி.. மாறி. நினைவில் வந்தீர்கள்.
'இனி நான் என்ன செய்யப்போகிறேன். .? யோசிக்க வேண்டிய விசயம்.. ஆனால் தலைவலி. என்னை யோசிக்க விடவில்லை..!

நான் எழுந்து விட்டதை உணர்ந்து.. பவ்யாவின் அம்மாவும் எழுந்து விட்டாள்.
லைட்டைப் போட்டாள்.

"காபி.. வெக்கறங்க." என்றாள்.

"இல்ல.. வேண்டாம்.." உடனே மறுத்தேன். ஆனால் காபி குடித்தால்.. தேவலாம்போலிருந்தது.

"பரவால்ல. வெக்கறேன் இருங்க." என்றாள்.
பவ்யாவின் முதுகில் தட்டி.. அவளை எழுப்பிவிட்டாள்.

"என்னம்மா." என்று சிணுங்கலாகக் கேட்ட அவளிடம்.

"உங்கண்ணா எந்திரிச்சுட்டாரு.. பேசிட்டிரு..! நான் காபி வெக்கறேன்..!" என்று விட்டு அவள் சமையல் கட்டுக்குப் போய்விட்டாள்.

என்னைப் பார்த்து உட்கார்ந்து. "அண்ணா." என்றாள்.

அவளைப் பார்த்தேன்.
"ஹாய் ."

"ஹாய்ண்ணா.." என்று புன்னகைத்தாள்.

"ஸாரி.." என்றேன்.

"இட்ஸ் ஓகேண்ணா..!" எழுந்து என் பக்கத்தில் வந்து உட்கார்ந்தாள் "தேங்க்ஸ்ணா.."

"எதுக்கு.?"

" எங்ங வீட்டுக்கு.. வந்ததுக்கு."

"ஓ..! இல்லமா. நான்.. நல்ல நெலமைல வல்ல..!"

"பரவால்லண்ணா..! இதும் உங்க வீடுதான்..! அப்பா இல்லண்ணா. மொத நாங்க இருந்த ஊர்ல ஒரு மேரேஜ்.. அதுக்கு போயிருக்காரு..!" என்றாள்.

நான் அமைதியாக இருந்தேன்.
மெதுவாக என் கையைத் தொட்டாள்.
"அண்ணா."

அவளைப் பார்த்தேன்.

"நைட்டு.. என்ன நடந்துச்சுனு.. நாபகம் இருக்கா.?"

"இங்க. வந்தப்பறம்.எதும்..நாபகமில்ல..! நான் ஏதாவது.தப்பா. பேசிட்டேனா..?" என் அப்பாவைத் திட்டியது போல நாபகம் வந்தது.

"சே..சே..! அதெல்லாம் இல்ல..! " என்று சிரித்தாள்.

"ஸாரி.."

"அத விடுங்கண்ணா."

நாங்கள் பேசிக்கொண்டிருந்த போதே காபியுடன் வந்தாள்.
பவ்யாவின் அம்மா.
நான் மௌனமாக வாங்கிக் குடித்தேன்.
காபி குடித்த உடனே நான் எழுந்து விட்டேன்.
"சரி.. நான் கெளம்பறேன்.."

"இருந்துட்டு. போலாம்.. இல்லண்ணா." என்றாள் பவ்யா.

"இல்லமா..!"

"நான் வரட்டுமாண்ணா.. உங்ககூட.?"

"நீ.. எதுக்கு..?"

" இல்ல. நீங்க. .."

" பரவால்ல. நான் போயிருவேன்..!" என்று விட்டு வீட்டிலிருந்து வெளியேறினேன்..!!

தெருவில் இறங்கி. விறுவிறுவென நடந்ததில் என் சிந்தனைகள் இன்னும் தீவிரமாகியது.
'நியாயமாகப் பார்த்தால். நான் ஒன்றும் உத்தமன் இல்லை. அந்த வகையில் நிலாவினி செய்தது ஒன்றும்.. துரோகமாகிவிடாது..! அவளை நான் மன்னிக்கலாம்.! ஆனால் இந்த குணா..? அவனை மன்னிக்கவே முடியாது..! இவ்வளவு தூரம்.நயவஞ்சகம் செய்தவன்.. அவன்தான்..!' அவன்மேல்.. என் கோபம். பயங்கரமான வன்மம் கொண்டது..!

கதவைத் திறந்தவள் நீதான்..! தூங்கவில்லை போலும்.. உன் கண்களைப் பார்த்தால். தூங்கியது போலத்தெரியவில்லை.
எதுவும் பேசாமல் விலகி நின்றாய்.
உள்ளே போனேன்.
நிலாவினியும் இருந்தாள். அவளும் தூங்கவில்லை போலும். .!
தரையில் பாய் விரித்திருந்தது.
நான் எதுவும் பேசாமல் அதில் படுத்து கண்களை மூடிக்கொண்டேன்..! அப்படியே தூஙகியும் போனேன்..!!

மறுபடி நான் கண்விழித்த போது சூரிய வெளிச்சம்.. பளீரென கண்ணை உறுத்தியது.
நேரம் பத்து மணிக்கு மேலாகியிருந்தது.
நான் எழுந்ததும் உடனே நீ காபி கொடுத்தாய்.!
"சாப்பிட்டியா..?" என்று உன்னிடம் கேட்டேன்.

"இல்லீங்க." என்றாய்

நான் அமைதியாக காபியை உறிஞ்சினேன்.
யாரும் பேசிக்கொள்ளவில்லை. நிலாவினியோ இருகிப் போயிருந்தாள்.!

நான் எழுந்து போய் குளித்தேன். நீ கொடுத்த உணவைக் கொஞ்சமாக சாப்பிட்டேன்.
சாப்பிட்ட பின்.உடை மாற்றிக்கொண்டு கிளம்பிவிட்டேன்..!

நான் எதுவும் பேசவில்லை..!

பேச்சு வார்த்தை இல்லாத நிலையில் இரண்டு நாட்கள் சென்றன..!

மூன்றாவது நாள்..!
மாலைநேரம்தான் நான் வீட்டிற்கு போனேன்.
நீ மட்டும்தான் இருந்தாய்..! நிலாவினியைக் காணவில்லை. முதலில் எதுவும் கேட்கவில்லை. அரை மணிநேரம் ஆகியும்.. அவளைக் காணாததால் கேட்டேன்.
"அவ.. எங்க போனா.?"

தயங்கியவாறு." அவங்க.. வீட்டுக்கு." என்றாய்.

அதற்குமேல் நான் எதுவும் கேட்கவில்லை.

இரவு நான் காரைக்கொண்டு போய் செட்டில் விட்டபோது நிலாவினி அவள் வீட்டில்தான் இருந்தாள்.
நித்யாவும் இருந்தாள்..!

நான் "போலாமா..?" என்றதும்..
என் பின்னால் வந்து விட்டாள் நிலாவினி.

இரவு..!
வெகு நேரமாகியும் என்னால் தூங்க முடியவில்லை..! நான் புரண்டு புரண்டு படுக்க.. நீ என் அருகில் வந்து உட்கார்ந்தாய்.
நான் பேசவில்லை.
என் காலை எடுத்து உன் மடியில் வைத்துக் கொண்டு இதமாகப் பிடித்து விட்டாய்.

நீண்ட நேரத்துக்கு பின்.. நான் பேசினேன்.
" ஏன்டி.. நீ தூங்கல..?"

"உங்களால தூங்க முடியுதுங்களா..?" என்று என்னைத் திருப்பிக் கேட்டாய்.

என் நிம்மதியின்மை உனக்கும் புரிந்து விட்டது.
சிறிது நேரம் நம்மிடையே மௌனம்..!

"சரி.. நீ போய் தூங்கு.." என்றேன்.

"பரவால்லீங்க." என்றாய்.

"எத்தனை நேரம் இப்படியே உக்காந்துருப்ப.?"

"அக்கா.. வராதுன்னு நெனச்சங்க." என்றாய்.

புரியவில்லை எனக்கு "எங்க..?"

" நம்ம வீட்டுக்கு.."

" ஏன்.?"

"இல்ல." லேசாய் மிரண்டு "அம்மா வீட்லயே இருந்துக்கனும்னு." என்றாய்.

"என்னடி சொல்ற.. புரியற மாதிரி சொல்லு."

சிறிது இடைவெளிவிட்டு..
"வந்து.அக்கா.. என்கிட்ட.. அப்படித்தாங்க. சொல்லுச்சு.." என்றாய்.

"எப்படி.?"

"நான் அம்மா.. வீட்டுக்கு போறேன்..! இனி வருவேனோ மாட்டேனோ தெரியாது..! ஒருவேளை அப்படி என்னை வேண்டாம்னு சொல்லிட்டாருன்னா.. அப்பறம் நீதான் அவர பாத்துக்கனும்.. னு சொல்லி. அழுதுட்டு.. நான் எவ்வளவோ சொல்லியும் கேக்காம போச்சுங்க..!!" என கலங்கிய குரலில் நீ சொல்ல.
நான் திகைப்படைந்தேன்..!!!!

-சொல்லுவேன்..!!!!

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

தமிழ்காமவெறி தளம்
 
Back
Top